துபாய் காவல்துறை மற்றும் ஈமான் கலாச்சார மையம் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்
துபாய் காவல்துறை மற்றும் ஈமான் கலாச்சார மையம் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி ஈமான் அமைப்பின் தலைவர் PSM ஹபிபுல்லா காக்கா அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுச் செயலாளர் ஹமீது யாசின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் ஹாஜா அலாவுதீன், பீர், ஹாமீது, சேக், தாஸ்தஹிர் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.





